Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரமலான் நோன்பு பெருநாள் தமிமுன் அன்சாரி வாழ்த்து 

மே 13, 2021 05:14

நாகை: கொரோனா ஒழிந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்போம் என மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி வெளியிட்டுள்ள ரமலான் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: 

உலகின் மற்றுமொரு திருநாளாக 'ஈதுல் பித்ர்' எனும் நோன்புப் பெருநாள் மலர்ந்தி ருக்கிறது.  உலகப் பொதுமறையான திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் மாதத்தில்  இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டாக 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் நிறைவாக உலகமெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்பெருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

பசியின் கொடுமையை உணரும் வகையிலும், பிறர் பசியை போக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை பெறும் வகையிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் இறை வழிபாட்டோடு நகரும் இந்த நாட்கள் உணர்வு பூர்வமானவை. நிறைவாக பெருநாளை கொண்டாடி மகிழ வான்பிறையை எதிர் நோக்கும் நிமிடங்கள் அழகானவை. 

ஆனால் அந்த உற்சாகத்தை வழக்கம் போல  கொண்டாட முடியாத சூழலில் நாம் இருக்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் பரவுகின்ற நிலையில், அவரவர் இல்லங்களிலேயே தொழுது விட்டு மகிழ்ச் சியினை கட்டுப்பாட் டோடு வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம்  இருக்கிறது. 

எனவே இல்லங்களில் இறைவனை தொழுது,  நமது தாய் நாட்டில் கொரோனா தொற்றால் அவதிப்படும் நோயாளிகள் நலம் பெறவும், இத் தொற்று நோயி லிருந்து நாடு விரைந்து பாதுகாக்கப் படவும், இந்த அரிய பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள் உட்பட அனைவரும் ஆரோக்கியத்துடன் செய லாற்றவும் மனம் உருகிப்  பிரார்த்திப்போம். 

கொரோனா தொற்று முற்றிலும் ஒழிந்து, உலக மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு விரைந்து திரும்பட்டும் என்ற பிரார்த்தனையோடு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ரமலான் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்